இந்த தேர்தல் முடிவுகளில் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த நிலையைத்தான் தொங்கு சட்டசபை என்று கூறுவார்கள். உதாரணமாக A கட்சி அல்லது கூட்டணி 100 இடங்களிலும், B கூட்டணி கட்சி மற்றும் கூட்டணி 100 தொகுதிகள் வெற்றி பெறுவதாக வைத்துக்கொள்வோம். C கட்சி 34 தொகுதிகளில் வெற்றி பெறுவதாக வைத்துக்கொள்வோம். இதில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதுதான் தொங்கு சட்டசபை கூறுகிறார்கள். அப்படி தொங்கு சட்டசபை அமைக்கும் பட்சத்தில் முழு அதிகாரமும் ஆளுரின் கைக்கு செல்லும்.