TN Crop Loan Waiver : விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி! தமிழக அரசு அறிவிப்பு! முழு விவரம்!

Published : May 25, 2026, 06:44 PM IST

TN Crop Loan Waiver: விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
15
விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத். கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதி. திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி. பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும். தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி முழுமையாக ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

25
50 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் 100% தள்ளுபடி

அதாவது கூட்டுறவு வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மிகப் பெரிய சலுகையாக, அவர்களது கடன் தொகை முழுவதும் முற்றிலுமாகத் தள்ளுபடி (100% தள்ளுபடி) செய்யப்படுகிறது. ரூ.50,000 வரை கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்த வேண்டாம். அதே வேளையில், இதே வரம்பிற்குள் (ரூ. 50,000 வரை) கடன் வாங்கியுள்ள சிறு விவசாயிகளுக்கு, அவர்களது மொத்த நிலுவைத் தொகையில் சரிபாதி, அதாவது 50% தொகை தள்ளுபடி செய்யப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சிறு விவசாயிகள் 50% கடன் மட்டும் செலுத்தினால் போதும்.

35
ரூ.50,001 முதல் ரூ.60,000 வரையிலான கடன்கள்

மேலும் 50,000 ரூபாய்க்கு மேல், 60 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் வாங்கியுள்ள குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு 20,000 ரூபாயும் கடன் கணக்கிலிருந்து தள்ளுபடி செய்யப்படவுள்ளது. கடன் தொகை 60,001 ரூபாயிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் பட்சத்தில், குறு விவசாயிகளுக்கு 30,000 ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு அதில் பாதியான 15,000 ரூபாயும் தள்ளுபடிச் சலுகையாக வழங்கப்படுகிறது.

ரூ. 60,001 முதல் ரூ. 70,000 வரையிலான கடன்கள்

கடன் தொகை 60,001 ரூபாயிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் பட்சத்தில், குறு விவசாயிகளுக்கு 30,000 ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு அதில் பாதியான 15,000 ரூபாயும் தள்ளுபடிச் சலுகையாக வழங்கப்படுகிறது.

ரூ. 70,001 முதல் ரூ. 80,000 வரையிலான கடன்கள்

இந்த வரம்பில் பயிர்க்கடன் பெற்று நிலுவை வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு 20,000 ரூபாயும், சிறு விவசாயப் பிரிவினருக்கு 10,000 ரூபாயும் தள்ளுபடி செய்ய அரசு வழிவகை செய்துள்ளது.

45
ரூ. 80,001 முதல் ரூ. 1,00,000 வரையிலான கடன்கள்

விவசாயிகளின் கடன் தொகை 80,001 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் பட்சத்தில், குறு விவசாயிகளுக்கு நிலையான தொகையாக 10,000 ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு தலா 5,000 ரூபாயும் கடனிலிருந்து கழிக்கப்படும்.

ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன்கள்

கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பெருந்தொகையைப் பயிர்க்கடனாகப் பெற்றுள்ள குறு மற்றும் சிறு விவசாயிகள் இரு தரப்பினருக்குமே, சமமாக தலா 5,000 ரூபாய் வீதம் கடன் தள்ளுபடி சலுகை அளிக்கப்படும்.

55
14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள்

மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5.000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories