நான் சாவுக்கு பயப்படவில்லை, அதற்கு பிறகு உள்ள பொறுப்பை நினைத்தே பயப்படுகிறோம். எஃப்ஐஆர் பதிவு செய்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் நான்காவது குற்றவாளியான நூர் நிஷாவை பிடிக்க முடியவில்லை. வெளியில் இருந்தால் ஜாமீன் பெறுவதற்கும், சாட்சிங்களை கலைப்பதற்கும் முயல்வார். அவரை எப்போது கைது செய்யப்போகிறீர்கள்? உடலை வாங்க மாட்டோம் என நிபந்தனை விதித்ததாலேயே முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தார்கள். குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்க வேண்டாம். அது அரசுக்குத்தான் அசிங்கத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் கோபால கிருஷ்ணன், உதவி ஆணையர் செந்தில் குமார் டிஸ்மிஸ் செய்யுங்கள். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, இவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.