மானிய விலையில் உணவு பொருட்கள்
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் உணவு பொருட்களை நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அதன் படி
அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. மாநிலங்களுக்கு ஏற்ப உணவு பொருட்கள் வழங்கப்படுவது மாறுபடும்.
இந்த நிலையில் அரசின் சார்பாக வழங்கப்படும் உணவு பொருட்கள் சரியான மக்களை சென்றடைகிறதா என அரசின் சார்பாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் ஒரு சிலர் பல பெயர்களில் ரேஷன் அட்டைகள் வைத்திருப்பதும், கள்ள சந்தையில் உணவுகளை விற்பதும் தெரிய வந்தது. மேலும் அரசு ஊழியர்களும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு பொருட்களை பெற்று வருவதும் கண்டறியப்பட்டது.