மீண்டும் மழை எப்போது.?
காற்றழுத்தம் கரையை கடப்பது கூட அங்கு யாரும் அறிய மாட்டார்கள், ஏனென்றால் அதில் எதுவும் இல்லை, கரையை கடக்கும் நேரத்தில் அது வெயிலாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் இன்று சூரியன் உச்சம் பெறும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்நாட்டில் நகர்ந்து, அதன் தெற்கே சென்னை அமைந்திருப்பதால், மேற்குப் பக்கத்திலிருந்து (நிலம்) தற்காலிக காற்று வீசும்,
எனவே இன்று மாலை முதல் நாளை காலை வரை வேப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். சென்னை, பாண்டி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். ஆங்காங்கே சாதாரண மழை பெய்யும். சில இடங்களில் மழை பெய்யும், சில இடங்களில் மழை பெய்யாது என தெரிவித்துள்ளார்.