இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். தமிழக சட்டமன்றத்தில் ஈரோடு மக்களுக்காக குரல் கொடுத்தார். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அசத்தினார். இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.