ஏறிய விலை திடீரென இறங்கியது
இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்திருந்தனர். சமையலில் ருசியை கொடுக்கக்கூடிய இந்த காய்கறிகள் இல்லாமல் சமைக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. மேலும் தரம் குறைந்த தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. இதனால் காய்கறி சந்தையில் பொதுமக்கள் அரை கிலோ, ஒரு கிலோ என்ற அளவிலேயே வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் காரிப் பருவ பயிர்கள் வரத்து, மழை பாதிப்பு குறைவு இதன் காரணமாக தக்காளி, வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் சரசரவென குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.