கண்டுகொள்ளாத தமிழக அரசு
இந்த வழக்குகளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின் போது அதிமுக வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை தரப்பில் வாதாடுகையில், கடந்த 2023ம் ஆண்டில் மரக்காணத்தில் இதேபோல, விஷச் சாராயம் குடித்து 30 பேர் பலியானர். அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காவல் துறையிடம் புகார் அளித்தனர்.
மேலும் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இருப்பினும் தமிழக அரசு சார்பாக எந்த வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த பகுதியில் தங்கு தடையின்றி சாராய விற்பனை நடந்து வருகிறது. மேலும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயத்தில் கலக்க எத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.