தீபாவளிக்கு 4 நாட்கள் அரசு விடுமுறை.? முதல்வருக்கு பறந்த முக்கிய கடிதம்

Published : Oct 13, 2024, 01:28 PM ISTUpdated : Oct 13, 2024, 02:30 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகின்றனர். நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இந்தநிலையில் தமிழக முதலமைச்சருக்கு விடுமுறை தொடர்பாக முக்கிய கடிதம் சென்றுள்ளது. 

PREV
15
தீபாவளிக்கு 4 நாட்கள் அரசு விடுமுறை.? முதல்வருக்கு பறந்த முக்கிய கடிதம்

பணிக்காக வெளியூர் பயணம்

படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமலும், சொந்த ஊரில் உரிய வருமானம் இல்லாத காரணத்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு பிழைப்பை தேடி செல்கின்றனர்.  இதன் காரணமாக பெற்றோர்களை விட்டும், உறவினர்களை விட்டும் தனியாக செல்லும் நிலை தற்போது உள்ளது. எனவே ஏதேனும் விஷேச நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு செல்வார்கள்.

குறிப்பாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் கிடைக்கும் விடுமுறைக்கு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு புறப்படுவார்கள். அந்த வகையில் கடந்த பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேருந்து, ரயில் மற்றும் சொந்த கார்களின் மூலம் பயணம் செய்தனர்.

25

தீபாவளி சிறப்பு பேருந்து

எனவே இந்தாண்டும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது அனைத்து ரயில்களிலும் இடங்கள் காலியாகிவிட்டது. தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. இந்தாண்டு எத்தனை பேருந்துகள் இயக்கலாம் என்பது தொடர்பாக நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது.

இதனிடையே இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக புதிய வகை உடைகளும், பட்டாசுகளும் சந்தைக்கு வந்துள்ளது. மக்களும் போட்டி போட்டு தற்போதே வாங்க தொடங்கியுள்ளனர். எனவே இந்தாண்டு தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இடையில் நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. .

35
diwali

நவம்பர் 1ஆம் தேதி பொது விடுமுறை

அடுத்து 2 ஆம் தேதி சனிக்கிழமையும், 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் உள்ளது. எனவே இடையில் உள்ள நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை கிடைக்குமா என மக்கள் ஆவலோடு காத்துள்ளனர். வெள்ளிக்கிழமை அரசு பொது விடுமுறை அறிவித்தால் தொடர்ந்து  4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் நிலை உருவாகிவிடும். எனவே கடந்த சில ஆண்டுகளாகவே  தமிழக அரசு தீபாவளிக்கு முந்தைய நாள் அல்லது அடுத்த நாள் அரசு பொதுவிடுமுறையாக அறிவித்து வருகிறது.

எனவே நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை விட வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் அரசு ஊழியர்கள் சங்கமும் நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை தினமாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,

45

அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

"தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீபாவளி முடிந்த மறுநாள் நவம்பர் 1-ந் தேதி மட்டும் அரசு அலுவலகங்கள் மட்டுமல்ல பள்ளிகள் வேலை  நாளாக உள்ளது. இதனை தொடர்ந்து நவம்பர் 2ஆம் தேதி  மற்றும் 3-ந் தேதி முறையே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாட்களாக உள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1-ந் தேதி ஒருநாள் மட்டும் தமிழக அரசு சார்பாக விடுமுறையாக அரசு அறிவித்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் நிலை உள்ளது.

1 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.! தேதி குறித்த தமிழக அரசு

55

தமிழக அரசின் நிலைப்பாடு என்ன.?

எனவே தமிழக மக்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் நல்லமுறையில் 2 நாட்களை தங்களது குடும்பத்துடன் தங்கி இருந்து கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும்  தீபாவளி பண்டிகை முடிந்து பணிபுரியும் இடத்திற்கு மீண்டும் பொதுமக்கள் செல்ல பேருந்து  வசதியும் எளிதாக கிடைக்கும். எனவே நவம்பர் 1-ந் தேதி வெள்ளிக்கிழமையை  அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே தமிழக அரசும் நவம்பர் 1ம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக  அடுத்த வாரம் விடுமுறை தொடர்பான  அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories