மக்களே உஷார்! இந்த 4 நாட்கள் தப்பி தவறி கூட வெளியே போயிடாதீங்க! வெயில் பொளந்து கட்டப்போகுதாம்!

Published : Aug 25, 2025, 11:42 AM IST

தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 28 வரை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

PREV
15
வெப்​பநிலை அதி​கரிக்கும்

தமிழகத்தில் கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட வட மற்றும் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் வெயில் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்​கத்​தை​விட 2 முதல் 3 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை வெப்​பநிலை அதி​கரிக்க வாய்ப்​பு உள்​ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

25
சென்னை வானிலை மையம்

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

35
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று முதல் 28 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

45
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 .முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை முதல் 28 வரை; தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2.முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என கணித்துள்ளது.

55
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36°செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories