மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு.! 28 ஆம் தேதி பள்ளிகளில் கண்டிப்பாக இதை செய்யணும்- கல்வித்துறை அதிரடி

Published : Aug 25, 2025, 11:06 AM IST

மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களில் போதைப் பொருட்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PREV
13
பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கம்

கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் மாணவர்கள் கல்வி அறிவில் மட்டும் சிறந்து விளங்குவதோடு மட்டுமில்லாமல் நல் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. 

பள்ளிகளில் வாழ்க்கை கல்வி, மேலும் மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த, அவர்களை வெளியுலகம் அறியச் செய்யும் திட்டம். பள்ளி மாணவர்களை அரசு அருங்காட்சியகங்கள், வரலாற்ற இடங்கள் மற்றும் சமூக சேவை தளங்களுக்கு அழைத்துச் சென்று, சமூக பொறுப்பு மற்றும் ஒழுக்கத்தை கற்பிக்கப்பட்டு வருகிறது.

23
மாணவர்களிடேய போதைப்பழக்கம்

இந்த சூழலில் தற்போது போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் சர்வ சாதாரணமாக உள்ளது. மது போதையில் பள்ளிகளுக்கு வருவது. ஆசிரியர்களை தாக்குவது போன்ற தீய பழக்கங்களில் மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதனை தடுக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வரும் 28ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை நடத்தவும், அந்த கூட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது .

33
பள்ளிகளில் போதைப்பொருட்களுக்கு எதிராக தீர்மானம்

இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை கூட்ட வேண்டும் என்றும், அதில் பல்வேறு பொருள்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இந்த கூட்டத்தில் குறிப்பாக, போதைப் பொருட்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை போதைப்பொருள் சீரழிக்கிறது என்றும் தெரிவித்துள்ள அவர், பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை போதை பொருள், புகையிலை போன்ற பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, அரசின் உத்தரவை மீறி போதைப்பொருட்கள் விற்பனை நடந்தால் காவல்துறைக்கு உடனடியாக புகார்களை அளிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories