சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ஆசிரியர்கள்.! 1996 பணியிடங்கள் நிரப்ப போறாங்க வெளியான அறிவிப்பு

Published : Jul 10, 2025, 08:27 AM ISTUpdated : Jul 10, 2025, 08:32 AM IST

தமிழகத்தில் 1996 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 12 கடைசி நாள்.

PREV
14
தமிழகத்தில் ஆசிரியர்கள் காலிப்பணியிடம்

மாணவர்களுக்கு கல்வி தான் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக உள்ளது. அந்த வகையில் ஆசிரியர்கள் கல்வி போதிக்கும் ஆசானாக திகழ்கிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் உரிய ஆசிரியர்கள் இல்லாத நிலையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வியானது பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதற்காக பகுதி நேர ஆசிரியர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ஆசிரியர்கள் காலிப்பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட தமிழக அரசும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அந்ந வகையில் 1996 ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

24
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1, ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண்.02/2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று (10.07.2025) வெளியிடப்படுகிறது. அந்த வகையில் பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள்:

தமிழ் 216 இடங்களும், ஆங்கிலம் 197, கணிதம் 232, இயற்பியல் 233 இடங்களுக்கும், வேதியியல் 217, தாவரவியல் 147, விலங்கியல் 131, வணிகவியல் 198 இடங்களுக்கும், பொருளியல் 169, வரலாறு 68 புவியியல் 15, அரசியல் அறிவியல் 14, கணினி பயிற்றுநர் நிலை-1க்கு 57 இடங்களும், உடற்கல்வி இயகுகனர் நிலை 1க்கு 102 என ஒட்டுமொத்தமாக 1996 இடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

34
ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பிக்க அழைப்பு

கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் விண்ணப்பதாரர்கள் இணையதளம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், (Online Application) விண்ணப்பிக்கும் வகையில் 10.07.2025 முதல் 12.08.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விருப்பத்தை திருத்தம் செய்ய ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 மேலும் தேர்வானது செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும்போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன்பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி

கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு விதியின் பொருந்தக்கூடிய தன்மை, தேர்வுத் திட்டம், கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற விவரங்கள் தொடர்பான பிற தகவல்களுக்கு, ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தின் வலைத்தளமான https://www.trb.tn.gov.in இல் பதிவேற்றம் செய்யப்பட்ட விரிவான அறிவிப்பைப் பார்க்க அறிவுறுத்தப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories