TASMAC New Limits: மதுபிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்விதமாக டாஸ்மாக் கடைகளில் தனி நபர் மது விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் முக்கிய வீதிகள்தோறும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பண்டிகை காலங்களில் மது விற்பனை கொடிகட்டி பறப்பதால், அரசுக்கு வருமானம் ஈட்டித் தருவதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. மது குடிப்பவர்களால் அவர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பமே பாதிக்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் திராவிட அரசுகள் செவிசாய்ப்பதில்லை.
24
தேர்தல் நடத்தை விதிகள்
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்களை கட்சிகள் விநியோகம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்படும் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
34
டாஸ்மாக்கில் மது விற்க கட்டுப்பாடு
இந்த நிலையில், தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 12 பீர் பாட்டில்கள் அல்லது 7.8 லிட்டர் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மது வகைகளை தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும்.
இதேபோல் வெளிநாட்டு மது வகைகளையும் தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும். இதற்கான விற்பனை ரசீதை அவர்களிடம் கொடுக்க வேண்டும் என அனைத்து டாஸ்மாக் கடைகளின் மேலாளர்கள், விற்பனையாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நான் ஏற்கெனவே சொன்னபடி தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை சோதனையின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்படும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆகவே அரசியல் கட்சி பிரமுகர்கள் டாஸ்மாக்கில் மொத்தமாக மது வகைகளை வாங்கி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் டாஸ்மாக் நிர்வாகம் மது விற்பனைக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.