TASMAC: டாஸ்மாக்கில் வருவாய் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தவெக அரசு மிகப்பெரிய அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் செல்வம் கொழிக்கும் துறையாக டாஸ்மாக் உள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை கொடிகட்டி பறக்கிறது. அரசுக்கு வருமான ஈட்டித் தருவதில் டாஸ்மாக் பெரும் பங்கு வகித்து வருகிறது. டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு அதிகமாக பணம் வசூலிக்கப்படுவதாக திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சிகளிலும் தொடர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது.
தவெக அரசின் அதிரடி நடவடிக்கை
இப்போதைய முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தேர்தலுக்கு முன்பாக இதனை மிகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைத்திருந்தார். இதன்பின்பு தான் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் பணம் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் நடவடிக்கைகளை முதல்வர் விஜய் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் டாஸ்மாக்கில் வருவாய் முறைகேட்டைத் தடுக்க அரசுக்குக் கூடுதலாக ரூ.1,200 கோடி வருமானம் வரும் வகையில் தவெக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
23
டாஸ்மாக் வருவாய் முறைகேடு நிறுத்தப்படும்
அதாவது இதற்கு முந்தைய ஆட்சிகளில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானப் பெட்டிகளுக்கு (Cases) முறையற்ற வகையில் தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை அரசு கணக்கிற்குச் செல்லாமல், வேறு வழிகளில் "கட்சி நிதி" என்ற அந்தந்த ஆட்சியாளர்களின் கட்சிக்கு சென்று வந்தது.
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மதுபானங்கள் பெட்டி ஒன்றுக்கு ரூ.90, பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.40, ஒயின் பெட்டி ஒன்றுக்கு ரூ.20 அரசு கஜானாவுக்கு செல்லாமல் அந்தந்த கட்சிகளுக்கு நிதியாக சென்று வந்தது. இந்த முறையற்ற வசூல் மூலம் மட்டும் மாதந்தோறும் சுமார் ரூ.100 கோடி வரை தனியாருக்கு அல்லது குறிப்பிட்ட தரப்பிற்கு சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
33
அரசுக்கு கூடுதலாக ரூ.1,2000 கோடி வருமானம்
அரசுக்குச் சேராமல் மறைமுகமாக சென்று கொண்டிருந்த இந்த பிரம்மாண்டத் தொகையை, இனி நேரடியாகத் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ கணக்கிலேயே கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அதிரடி நடவடிக்கை மூலம் மறைமுகமாக வசூலிக்கப்பட்ட நிதி இனி முழுமையாகத் தடுக்கப்படும். இந்தத் தொகை நேரடியாக அரசுப் பொதுக் கணக்கில் சேர்க்கப்படும்.இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக ரூ.1,200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக அரசின் இந்த நடவடிக்கை ஒரு தரப்பினர் மத்தியிலும், குடிமகன்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.