அரக்கோணம் வரை செல்ல வேண்டிய கீழ்க்கண்ட ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக திருவாலங்காடு நிலையத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 4:05, பிற்பகல் 2:25 மற்றும் மாலை 06:15 மணிக்குப் புறப்படும் ரயில்கள் திருவாலங்காடு வரை மட்டுமே செல்லும்.
ஆவடியில் இருந்து காலை 06:20 மணிக்குப் புறப்படும் ரயில் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.
இதேபோல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து காலை 6:30, 9:10, 10:30, 11:00, நண்பகல் 12:40, பிற்பகல் 01:25, மாலை 3:45, 4:45, 5:15, 5:45, 6:05, 6:40, இரவு 7:30, 8:20, 09:10, 10:00 மற்றும் இரவு 10:55 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரயில் திருவாலங்காடு வரை மட்டுமே செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.