டாஸ்மாக் வழக்கு! ஒரே நேரத்தில் இரு நீதிபதிகள் விலகல்! அடுத்து விசாரிக்க போவது யார் தெரியுமா?

Published : Mar 25, 2025, 12:07 PM ISTUpdated : Mar 25, 2025, 12:21 PM IST

TASMAC Case: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் இருந்து நீதிபதிகள் திடீரென விலகியுள்ளனர். இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

PREV
15
டாஸ்மாக் வழக்கு! ஒரே நேரத்தில் இரு நீதிபதிகள் விலகல்! அடுத்து விசாரிக்க போவது யார் தெரியுமா?
TASMAC Raid

தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள்  உள்பட 20 இடங்களில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில், 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம், தமிழக அரசு ஆகியோர் சார்பில்  மொத்தம் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

25
enforcement directorate

அதில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். . விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களையோ துன்புறுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு! ஐகோர்ட்டில் ஒரே போடு போட்ட தமிழக அரசு! அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை!

35
chennai high court

அப்போது தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர்: மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அமலாக்கத்துறை செயல்பட முடியாது. டாஸ்மாக் முறைகேடு புகாரில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரமே இல்லை என்றார். டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை.  60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்கதுறையினர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறினார். 

45
ED Vs TASMAC

இதனையடுத்து அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்வி எழுப்பினர். அதாவது எதற்காக சோதனை நடத்தப்பட்டுகிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தீர்களா?  எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்? அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் கூறிய நீதிபதிகள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக மார்ச் 25ம் தேதி வரை அதாவது இன்று நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: மாணவர்களுக்கு பள்ளித் தேர்வு இறுதி நாள்! கண்டிப்பா இதை செய்யணும்! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு

55
tasmac case hearing

இந்நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எந்தவித காரணமும் தெரிவிக்காமல் இந்த வழக்கில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு நீதிபதிகளும் விலகுவதாக அறிவித்தனர். மேலும் இந்த வழக்கை வேறு ஒரு அமர்வுக்கு மாற்றுவதற்கு தலைமை நீதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், கே.ராஜசேகர் அமர்வுக்கு தலைமை நீதிபதி மாற்றியுள்ளார். புதிய நீதிபதிகள் அமர்வு அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உள்ளனர். 

Read more Photos on
click me!

Recommended Stories