அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தனர். இந்நிலையில் மார்ச் 25ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எந்தவித காரணமும் தெரிவிக்காமல் இந்த வழக்கில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு நீதிபதிகளும் விலகுவதாக அறிவித்தனர்.