50 புதிய வருவாய் குறுவட்டங்கள்
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும், அரசின் நலத்திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைவதற்கும் சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பத்தூர், திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் 14 வருவாய் குறுவட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 வருவாய் குறுவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 வருவாய் குறுவட்டங்கள் என ஆக மொத்தம் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும்.