அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா
2024-25ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்வி செயல்பாடுகள், மாணவர்களின் சிறப்பு அம்சங்கள், ஆசிரியரின் சிறப்பு செயல்பாடுகள், ஆகியவற்றை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து பள்ளி ஆண்டுவிழா நடத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவின்படி ரூ.14 கோடியே 60 லட்சத்து 89 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.