எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, அதிமுக விவகாரம் தொடர்பாக பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கமாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைபிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுக ஐடி விங் சார்பில் சைதை துரைசாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.