திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்
உலகபுகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், அருணாசலேஸ்வரர் திருக்கோயில், முடி காணிக்கை செலுத்துமிடம் உள்ளிட்ட பல இடங்களில் தெலுங்கு மொழியில் தகவல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் என திரும்பிய பக்கமெல்லாமல், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் தகவல்கள் பலகைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.