இந்நிலையில் தமிழகத்தில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர் ஷார்ஜாவில் பணிபுரிந்து வந்துள்ளார். தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட ஷார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். வழக்கம் போல பயணிகள் அனைவரையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.