தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தினமும் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன. மறுபுறம் புகார்களும், ரேஷன் அரசி கடத்தல் சம்பவமும் நடந்து வருகிறது. குறிப்பாக, தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்குமாறு ஊழியர்களுக்கு, உணவு துறை பலமுறை உத்தரவிட்டும் அதை, பல ஊழியர்கள் சரிவர பின்பற்றுவதில்லை என்ற புகார்களும் அவ்வப்போது வருகிறது. இதன் காரணமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் அதிரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவை பிறப்பித்தது.