அதாவது இனி வரும் காலங்களில் 75% வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள், எவ்வித தன்னிச்சையான அனுமதியின் பேரிலும் தேர்வு எழுத முடியாது. இது, மாணவர்களிடையே பள்ளிக்கு வருவதன் அவசியத்தை உணர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகைப்பதிவை கண்காணித்து, அதன் அடிப்படையில் மட்டுமே தேர்வுக்கான அனுமதி வழங்கப்படும் என்பதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.