ஆட்டோ வாங்க பெண்களுக்கு ஒரு லட்சம் மானியம்.! கட்டுப்பாடுகள் நீக்கம்- தமிழக அரசு அதிரடி

Published : Nov 24, 2024, 09:00 AM ISTUpdated : Nov 24, 2024, 09:25 AM IST

தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படும். இந்தநிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டும், காலக்கெடுவை அதிகரித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது

PREV
14
ஆட்டோ வாங்க பெண்களுக்கு ஒரு லட்சம் மானியம்.! கட்டுப்பாடுகள் நீக்கம்- தமிழக அரசு அதிரடி
tamilnadu women

பெண்களுக்கான திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விடியல் பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது.

புதுமைப்பெண் திட்டம்  என பலவகையிலும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெண்கள் சொந்த காலில் சுயமாக நிற்கும் வகையிலும் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கும் வாய்ப்பை உருவாக்கி வருகிறது. அதன் படி  பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
 

24
pink auto

பெண்களுக்கு இளஞ்சிவப்பு ஆட்டோ

பெண்களின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரு புதிய முன்னெடுப்பாக 'இளஞ்சிவப்பு ஆட்டோக்களை' தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக சென்னை மாநகரில் பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

34
Pink Auto

காலக்கெடு நீட்டிப்பு

இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ் நாடு அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள். சென்னை மாவட்ட சமூக நல அலுவலர்கள் (வடக்கு மற்றும் தெற்கு), 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 600001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த காலக்கெடு நேற்றோடு முடிவடைந்துள்ள நிலையில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் கால அளவு 10.12.2024 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

44
pink auto

தகுதிகள் என்ன.?

 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்ட அந்த தகுதி நீக்கம் 

1. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ii. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ii. 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

iv. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

V. சென்னையில் குடியிருக்க வேண்டும்

Read more Photos on
click me!

Recommended Stories