போலீசார் ஓகே சொன்னால் தான் வேலை
இதனை தொடர்ந்து அரசுப் பணியில் சேரும் பணியாளர்களின் போலீசார் சார்பில் நேரடியாக வீட்டிற்கே சென்று சரிபார்ப்பு பணி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த நேரடி விசாரணையின் போது சான்றிதழ், குற்ற வழக்குகள் என அனைத்தும் விசாரிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த போலீசார் விசாரணையின் போது அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் தொடர்பாக ரிப்போர்ட் சரியாக இல்லாத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்தகட்ட விசாரணை செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.