புரட்டிப்போட்ட மழை
தமிழகத்தில் குறிப்பாக சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, தரும்புரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களை மழையானது புரட்டிப்போட்டது. ஒரே நாளில் 50 செமீட்டர் அளவிற்கு மழை கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாத்தனூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் அதி கனமழை பெய்ததால் நீர் வரத்து கடந்த 1 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை பல லட்சம் கன அடியாக உயர்ந்தது.
இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 1 அரைலட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆறு வெள்ளம் ஏற்பட்டு விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகள் மூழ்கியது.