தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையையொட்டி ஏற்பட்ட புயலால் சுமார் 50 செ.மீட்டர் அளவிற்கு மழை பல மாவட்டங்களில் கொட்டியது. இதனால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வீடுகள் முற்றிலுமாக மூழ்கியது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடு, உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அணைகளில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் உச்சத்தை தொட்டுள்ளது. எனவே பல இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது.