சென்னை அணை நீர் இருப்பு பகுதிகள்
சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை ஆகிய அணைகள் உள்ளது. அந்த அணைகளில் நீர் இருப்பை பொறுத்து தான் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும். மேலும் நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாகவும் சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
எனவே இந்த வடகிழக்கு பருவமழையை மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். மழை மட்டும் உரிய வகையில் பெய்யவில்லையென்றால் கடந்த 2019ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு சரக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர வேண்டிய நிலை தான் மீண்டும் ஏற்படும். எனவே மழையை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர்