கன மழை எச்சரிக்கை
இந்தநிலையில் அடுத்ததாக சேலம், கோவை வழியாக நீலகிரி மாவட்டத்திலும் "ஃபெஞ்சல்" புயல் சின்னத்தால் மழை வெளுத்து வாங்கியது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நேற்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் என எச்சரித்தது.இதே போல இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர். திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியது.