புதுச்சேரி நிவாரண உதவி அறிவிப்பு
இந்த நிலையில் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ள நிவராண நிதியாக 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதே போல தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து வெள்ள பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.