அரசு பணிக்காக போராடும் இளைஞர்கள்
ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் படிப்பை முடித்து வேலை தேடி உலகத்திற்கு வருகிறார்கள். அந்த வகையில் தனியார் துறையில் பல லட்சம் வேலைகள் குவிந்து கிடந்தாலும் அரசு பணிக்கே முக்கியத்துவம் கொடுத்து இரவு பகலாக படித்து தேர்வு எழுதுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக வேலை உத்தரவாதம், விடுமுறை, போனஸ், பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் என பல சலுகைகள் கிடைப்பது தான். இந்த நிலையில் புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.