மேலும் அதிக வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, அதன் விளைவாக வாந்தி, சோர்வு அல்லது தலைச்சுற்றல் ஏற்படக்கூடும் எனவும் காபி, தேநீர், மதுபானங்கள் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட ரசாயனக் குளிர்பானங்களை தவிர்த்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இளநீர், நுங்கு மற்றும் சத்தான பழச்சாறுகளை அதிக அளவில் பருகலாம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் வெயில் எப்படி?
தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி மற்றும் 23ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.