அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகையில் ரூ.5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு

Published : Nov 13, 2024, 06:52 PM IST

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் தொகையில் ரூ.5 லட்சம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அறிவிப்பில் யார் யாரெல்லாம் பயன் பெறலாம் என்று அறிந்து கொள்வோம்.

PREV
15
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகையில் ரூ.5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு
MK Stalin

தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பணியாளர்கள், ஊழியர்கள் தொடங்கி ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட அகில இந்திய பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் சொந்தமா வீடு கட்டுவதற்கோ, வாங்குவதற்கோ அதிகம் செலவாவதால் அவர்களது கஷ்டத்தை குறைக்கும் வகையில், செலவில் குறிப்பிட்டத் தொகையை அரசே முன்பணமாக வழங்குகிறது.

மேலும் வீடு கட்டுவதற்கோ, வாங்குவதற்கோ அரசுப் பணியாளர்கள் வங்கிகளை நாடும் பட்சத்தில் அவர்களுக்கு கடன் கிடைக்கும். ஆனால் அந்த கடன் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும். இதனை தவிர்ப்பதற்காக ஊழியர்களும் அரசு வழங்கும் தொகையையே பெற்றுக் கொள்ள முனைவு காட்டுகின்றனர். அப்படி வழங்கப்படும் தொகை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் தவணை முறையில் பிடித்தம் செய்யப்படும்.

25
mk stalin

அந்த வகையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்காக முன்பணமாக ரூ.50 லட்சமும், அகில இந்திய பணி அலுவலர்களுக்கு ரூ.75 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் தமிழக அரசு பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.20 லட்சமும் கூடுதல் முன்பணமாக வழங்கப்படுகிறது.

35
Tamil Nadu Government

இந்நிலையில், வீட்டு வசதி வாரியத்தின் நெற்குன்றம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்க அரசு பணியாளர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டத்தில் வீடுகளின் விலை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி வகையில் கூடுதல் தொகையை செலுத்த வீட்டு வசதி வாரியம் அறிவுறுத்துகிறது.

45
MK Stalin

தொடர் பணவீக்கம் மற்றும் மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக மொத்த செலவை சமாளிக்க அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு அலுவலர்களுக்கு கூடுதல் பணம் தேவைப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு வீடு கட்ட முன்பணத்தை பெறுகின்றனர். இவர்களுக்கு வழங்கும் தொகையில் கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

55
MK Stalin

இந்த கோரிக்கை தொடர்பாக தமிழக மின்பகிர்மானக் கழகத்தின் இணை இயக்குநர் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதன்படி நெற்குன்றம் திட்டத்திற்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் முன்பணத்தை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும், இந்திய பணி அளுவலர்களுக்கான கூடுதல் முன்பணத்த ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாகவும் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories