100 நாட்களுக்குள் செயல்படுத்திடுக
மாணவா்களுக்கு வடை, பாயாசம், இனிப்பு வகைகள், தரமான அரிசி, காய்கறி. பருப்பு கொண்ட உணவு வகைகளை தயாா் செய்து வழங்க வேண்டும் எனவும் இந்த திட்டத்தை நன்கொடையாளா்கள் மூலம் நிதியை பெற்று திதி போஜனம் எனப்படும் நல்விருந்து திட்டத்தைச் செயல்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் படி, ஒவ்வொரு பள்ளியிலும் 'நல்விருந்து நாள்' என்ற அடிப்படையில் 100 நாள்களுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு உணவுகள் வாலை இலையில் பரிமாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் சமூக நலத்துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மாணவர்களுக்கான சிறப்பு உணவு திட்டத்தில் அரிசி, கோதுமை, பருப்பு, தினை வகைகள், காய்கறி, கீரைகள், சிறுதானியங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.