மழை பாதிப்பு- அமைச்சர் பாராட்டு
அந்த வகையில் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக, பாதிப்படைந்த சுமார் 12.265 மின் கம்பங்கள், 343 பில்லர் பெட்டிகள், 680.86 கி.மீ மின் கம்பிகளைபோர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மின் விநியோக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு குறுகிய காலத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் சீரான மின்சாரம் வழங்கியதற்காக அனைத்து அலவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.