சிறிய அளவு நெல் நடவு இயந்திரங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் முதல் 1.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ரூ.68 கோடி செலவில் 51 நீர்வடிப்பகுதிகளில் 30,190 ஹெக்டேர் பரப்பளவில் தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நீர்வடிப்பு மேம்பாட்டுத் திட்டம். பண்ணைக் குட்டைகள் அமைத்தல், ஆழ்துளைக் கிணறுகள், சூரிய சக்தி மற்றும் மின் சக்தி பம்பு செட்டுகள், நீர் விநியோக குழாய்கள் நிறுவுதல் ஆகியவற்றிற்கு 100% மானியமும் வழங்கப்படுகிறது.
தருமபுரி, திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சி தணிப்பு திட்டத்திற்கு ரூ.110.59 கோடி. 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்ப ரூ.3 கோடி ரூபாய் ஒதுக்கியும் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.