இலவசமாக ஸ்மார்ட் போன்.! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு- உடனடியாக விண்ணப்பிங்க

First Published Oct 1, 2024, 9:14 AM IST

தமிழக அரசு சார்பாக மக்கள் நல திட்டங்கள் மற்றும் நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாணவர்களின் கல்வி  இடை நிற்றலை தடுக்கும் வகையில் அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் புதல்வன், புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

மேலும் மகளிர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் திருமண உதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான உதவி திட்டம், சுய உதவி குழு மூலம் கடன் உதவி திட்டம் என பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசு சார்பாக பல்வேறு சிறப்பு திட்டங்கள் மூலம் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. 

differently abled

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்

குறிப்பாக  பார்வையற்றவர்கள், கை கால்கள் பாதிக்கப்பட்டவர்கள், செவி தன் குறைபாடு உடையவர்களுக்கு வங்கி கடன் மூலமாக சுய வேலைவாய்ப்பு வங்கிக் கடன் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் 45% க்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குறைபாடு உடைய  மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக 2000ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தசைச் சிதைவு நோய்கள் பாதிக்கப்பட்டுருக்கு பராமரிப்பு உதவி தொகை வழங்கப்படுகிறது.

Latest Videos


மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசி

மாற்றுத்திறனாளிக்கான திருமண நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.  இதே போல பட்டதாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும் 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.  

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்,  பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியில் இயங்கக்கூடிய நாற்காலிகள்,  மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்,  பார்வையற்றவர்களுக்காக ப்ரைலி கைக்கடிகாரம், மாற்றுத்திறனாளிக்கான இலவச பேருந்து பயணச் சலுகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திறன் பேசி (ஸ்மார்ட் போன்) வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 

smartphones

விண்ணப்பிக்க அழைப்பு

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டம், வடசென்னைக்குட்டபட்ட பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் திறன்பேசி பெற இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத,காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திறன்பேசி பெற தங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tractor online

ஒரு வார காலத்தில் விண்ணப்பம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், UDID அட்டை ஆதார் அட்டை மற்றும் இளங்கலை கல்வி/முதுகலைக்கல்வி பயில்பவர்கள். பணிபுரிபவர்கள்/சுயதொழில் புரிபவர்கள் அதற்கான உரிய சான்றுகளுடன் ஒருவார காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார். 'இ - சேவை' மையத்தின் வாயிலாக, https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் தங்களது விபரங்களை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!