இயற்கையை தேடி செல்லும் மக்கள்
ஆண்டு முழுவதும் இயந்திரங்களோடு போட்டி போட்டு ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இளைப்பாறும் இடமாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற மலைப்பகுதிகள்உள்ள இடங்கள் உள்ளது. பச்சை பசை என காட்சி அளிக்கும் மரங்கள், குளுமையான காற்று, தலையை தொட்டு செல்லும் மேக கூட்டங்கள் என மலைப்பகுதிகள் ரம்மியமாக காட்சி அளிக்கும். சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு வாகனங்களில் இரைச்சல் சத்தத்தில் இருந்து ஓய்வு எடுக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மலைப்பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுப்பார்கள்.
அதுவும் கோடை காலம் என்றால் கேட்கவா வேண்டும், ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து விடுவார்கள். இதனால் சுற்றுலா தளங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. வாகனங்களில் சப்தத்தால் விலங்குகள் பாதிக்கப்படும் நிலை உருவானது. மேலும் அதிகளவு மக்கள் கூடுவதால் போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு என்ற நிலை உருவானது.