கட்டணங்களை குறைக்க நடவடிக்கை
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, தமிழகத்தில் 77 சுங்கச் சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், 13 சுங்கச்சாவடி காலாவதி ஆகிய உள்ளது. இவற்றில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, ஒன்றிய அரசு சுங்க விதிகளில் மாற்றம் செய்துள்ளதாகவும்,
சுங்கச்சாவடி காலாவதி ஆகிவிட்டது என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் தொடர்ந்து கட்டண வசூலிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். ஆனாலும், கட்டணங்கள் குறைக்க தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்று அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.