பட்டாசு - கட்டுப்பாடுகள் விதிப்பு
இதன் காரணமாகவே பட்டாசு வெடிப்பதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும்,
வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது. மேலும் பட்டாசு மூலம் ஏற்படும் மாசுக்கள் தொடர்பாகவும், காற்றின் தரம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாக தீபாவளி தினத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.