கொடைக்கானலுக்கு செல்ல மாற்று வழி.! சட்டப்பேரவையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Published : Apr 04, 2025, 11:15 AM ISTUpdated : Apr 04, 2025, 11:18 AM IST

கொடைக்கானலில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு மாற்றுப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

PREV
14
கொடைக்கானலுக்கு செல்ல மாற்று வழி.! சட்டப்பேரவையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Alternative route to Kodaikanal : வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தமிழகத்தில் உள்ள மக்கள் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்தவர்கள் குளுமையான இடங்களுக்கு மக்கள் செல்ல விருப்பப்படுவார்கள். அந்த வகையில் தமிழகத்தில் முக்கிய மலைப்பகுதி சுற்றுலா தலமாக இருப்பது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஏலகிரியாகும்.

அந்த வகையில் மலையின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு  நாள் தோறும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக சாலைகளில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.  

அடுத்தடுத்து 2 நாள் தொடர் விடுமுறை.! சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து துறை குஷியான அறிவிப்பு

24

கொடைக்கானலுக்கு மாற்றுவழிப்பாதை

எனவே கொடைக்கானலுக்கு ஏற்கனவே திண்டுக்கல் வழியாகவும், பழனி வழியாகவும் மலைக்கு செல்ல வழிகள் உள்ள நிலையில் புதிதாக மாற்று வழி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் கொடைக்கானல் மலைக்கு மாற்று வழி தொடர்பாக அமைச்சர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார், 

34

கொடைக்கானலில் தொடரும் கூட்ட நெரிசல்

கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வார இறுதி நாட்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் மாற்றுப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ வ வேலு, கொடைக்கானலுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

மலைகளின் அரசி ஊட்டி, கொடைக்கானலுக்கு இ பாஸ் கட்டாயம்; ஏப்ரல் 1 நாளை முதல் அமல்!

44

 மாற்றுப்பாதை திட்டத்திற்கு முக்கியத்துவம்

உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நானே நேரில் சென்று ஆய்வு செய்தேன். மாற்றுப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிந்தவுடன் முதலமைச்சரின் அனுமதி பெற்று மாற்றுப்பாதை அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பதில் அளித்தார்.
 

Read more Photos on
click me!

Recommended Stories