அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன்பெறுவுள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 9,448.35 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கும் வகையில் அகவிலைப்படி ஆண்டு தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதலைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கோரிக்கை மனுவில், மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.