குற்றங்களை தடுக்கும் சிசிடிவி
இதன் காரணமாக பெரும்பாலான குற்றங்கள் தடுக்கப்படுவதோடு குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க முடிகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் சிசிடிவி முக்கிய பங்கு வகித்து வருகிறது. பல இடங்களில் செயின் பறிப்பு, பெண்களுக்கு எதிரான சீண்டல்கள் போன்றவற்றில் இருந்து காக்கும் கருவியாக சிசிடிடி உள்ளது. சிசிடிவியின் பயன்பாடு அதிகரித்ததன் மூலம் குற்ற சம்பவங்களும் பெரிய அளவில் தடுக்கப்பட்டுள்ளது.
குற்றங்கள் நடைபெற்றாலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவும், குற்றவாளிகள் எந்த பகுதியில் தப்பித்து செல்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கவும் காவல்துறையினருக்கு பெரும் பயனாக உள்ளது. அந்த வகையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக காவல்துறை சார்பாகவும், தனியார் அமைப்பு சார்பாகவும் சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளது.