இத்திட்டத்தில் பயன்பெற பின்வரும் தகுதிகள் அவசியம்:
பயனாளி வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்.
சொந்தமாக பட்டா நிலம் இருக்க வேண்டும் (நிலம் இல்லாதவர்களுக்கு அரசு நிலம் வழங்க முன்னுரிமை அளிக்கும்).
பழைய குடிசை வீடு அல்லது ஓட்டு வீடுகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
மத்திய/மாநில அரசின் இதர வீட்டு வசதி திட்டங்களில் ஏற்கனவே பயன் பெற்றிருக்கக் கூடாது.
விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிளாக் டெவலப்மெண்ட் அலுவலகத்தில் (BDO Office) விண்ணப்பிக்கலாம். தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் இதற்கான தகுதியான பயனாளிகள் பட்டியல் ஆன்லைன் மூலம் சரிபார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மேலும் சுமார் 1 லட்சம் வீடுகளைக் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு வெளியிட்டுள்ளது. இதனால் இத்திட்டத்தில் விண்ணப்பித்து காத்திருக்கும் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.