* அதிக அளவிலான தங்கம் அல்லது பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கம், பணம் கொண்டு செல்லப்பட்டாலும் பறிமுதல் செய்யப்படும்.
* அரசியல் கட்சி தலைவர்கள் மதம், ஜாதி அல்லது மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது.
* பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
* அரசியல் கட்சிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது.
* அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க மாநில எல்லைகள் மற்றும் முக்கியச் சாலைகளில் பறக்கும் படைகள் (Flying Squads) அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.