முதல்வர் காரின் முன்புறமும், பின்பிறமும் பாதுகாப்பு படை வீரர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். ஆஸ்டின்பட்டி அருகே சுமார் 100 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அதன் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தினார். மற்ற வாகனங்களில் வந்த பாதுகாவலர்களும் உடனே ஓடி வந்தனர்.
மாற்று காரில் ஏறி சென்ற முதல்வர்
ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தியதால் நல்ல வேளையாக முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வேறு ஒரு காரில் ஏறி மதுரைக்கு புறப்பட்டு சென்றார். முதல்வர் சென்ற காரின் டயரின் வெடித்து நடுரோட்டில் நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.