இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்துக்கு தடை விதித்து அதனை பறிமுதல் செய்ய நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். நீதிபதிக்கு எதிராக புத்தகம் எழுதியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ''நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் அவரை கொச்சைப்படுத்தும் வகையில் மிக மோசமாக உள்ளது. கிடைத்தவற்றை வைத்து எழுதிய இந்த புத்தகத்தை எப்படி அனுமதித்தீர்கள்?'' என தமிழக அரசிடம் காட்டமான கேள்வி எழுப்பினார்கள்.
புத்தகம் விற்பனைக்கு வராது
அதற்கு தமிழக அரசு, ''சென்னை புத்தக கண்காட்சியை தமிழக அரசு நடத்தவில்லை. பபாசி தான் நடத்துகிறது. நீதிபதிக்கு எதிரான புத்தகம் விற்பனைக்கு வராது'' என்று கூறியுள்ளது. பின்பு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் இது தொடர்பான விரிவான விளக்கம் அளிக்கக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.