தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதில் தமிழக அரசின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் இரவு பகல் பாராமல் உழைக்கும் காவலர்களை கவுரப்படுத்தும் வகையில மாநில அரசு சார்பாகவும் மத்திய அரசு சார்பாகவும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு. வழங்கப்பட்டு வருகின்றன.