காவல்துறையினருக்கு அடித்தது ஜாக்பாட்.! தமிழக முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published : Jan 13, 2025, 01:13 PM ISTUpdated : Jan 13, 2025, 01:18 PM IST

தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு சூப்பரான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பயனடையவுள்ளனர்.

PREV
15
காவல்துறையினருக்கு அடித்தது ஜாக்பாட்.! தமிழக முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
tamilnadu police

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதில் தமிழக அரசின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் இரவு பகல் பாராமல் உழைக்கும் காவலர்களை கவுரப்படுத்தும் வகையில மாநில அரசு சார்பாகவும் மத்திய அரசு சார்பாகவும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  

தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு. வழங்கப்பட்டு வருகின்றன.
 

25

stalin police 1

இந்த ஆண்டு. காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்" வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர். இயந்திர கம்மியர் ஓட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும். 
 

35
Police

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்), இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (பெண்) நிலைகளில் களில் 60 பேர்களுக்கும் "தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்" வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400/-. 2025 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்.

45

மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் வீதம், மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்" வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

55
tamilnadu police

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். மேற்கண்ட அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு அணிவகுப்பு விழாவில்  தமிழ்நாடு முதலமைச்சர் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories