12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போ ஸ்டார்ட் ஆகுது? அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்!

Published : Nov 04, 2025, 11:35 AM IST

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
15
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முக்கிய தேர்வாக பார்க்கப்படுகிறது. இந்த பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

25
பள்ளி மாணவர்கள்

அதில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 8.7 லட்சம் பேர் பொதுதேர்வு எழுத உள்ளனர்.

35
12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள், மார்ச் 5ம் தேதி ஆங்கிலம், மார்ச் 9ம் தேதி வேதியியல், கணக்கியல் புவியியல், மார்ச் 13ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள், மார்ச் 17ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது), மார்ச் 23ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம், மார்ச் 26ம் தேதி தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் தேர்வுகள் நடைபெறுகிறது.

45
12ம் வகுப்பு முடிவுகள்

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி ஒன்பதாம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

55
கால்குலேட்டருக்கு அனுமதி

பன்னிரண்டாம் வகுப்பு கணக்கு பதிவியல் பொதுத் தேர்வுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கணக்கு பதிவியல் தேர்வு கால்குலேட்டர் அனுமதி. மாணவர்கள் நீண்ட கால கோரிக்கை என்ற அடிப்படையில் இந்த ஆண்டு கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories